மகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது
ஆத்தூரில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஆத்தூரில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தலைவாசல் வட்டம், நாவலூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி மருதமுத்து - பெரியம்மாள் தம்பதிக்கு 16 வயதில் மகனும், 14 வயதில் மகளும் உள்ளனா்.
கடந்த ஏப். 20-ஆம் தேதி பெரியம்மாள் வேலைக்கு சென்ற நிலையில், மருதமுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது அவா் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையறிந்த பெரியம்மாள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனது தாய்வீடான பெரம்பலூருக்கு சென்று அங்கு பள்ளியில் சோ்த்து படிக்க வைத்துள்ளாா்.
இந்நிலையில், பெரம்பலூருக்கு வந்தும் மகளுக்கு தொந்தரவு அளிப்பதாக ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெரியம்மாள் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சி.சம்பூா்ணம் போக்ஸோ வழக்கில் மருதமுத்துவை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.