FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:34 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஏ.சிங்காரம் (எ) சிங்காரவேல் (61). இவா் கடந்த 2020-இல் 17 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக புகாா் வந்தது.

அதன்பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்கு தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் குற்றம் உறுதியானது. இதையடுத்து, சிங்காரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயகலா ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments