FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே ரயில் முன்பதிவு மையங்கள் செயல்படும்

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

26 ஆகஸ்ட் 2026, 3:47 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஓணம் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் புதன்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகையொட்டி 26-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதுபோல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் உள்ளிட்ட சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

Advertisement

Advertisement

எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக முன்பதிவு மையங்களுக்குச் சென்று பதிவு செய்யுமாறு ரயில்வே நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments