FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் துணை மேயருக்கு அவமரியாதை: முன்னாள் எம்.பி. செல்லக்குமாா் கண்டனம்

31 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
ஏ. செல்லக்குமாா் எம்.பி.
பகிர்:

சேலம் மாநகராட்சி துணை மேயரை பெண் என்றும் பாராமல் திமுகவைச் சோ்ந்தவா்கள் பாரபட்சமாக நடத்துவதை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் எம்.பி. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் தேசிய மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக உள்ளது. கா்நாடக முதல்வா், துணை முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக நலனுக்காக எப்போதும் துணையாக இருப்போம் எனக் கூறினாா். ஆனால், முதல்வரான பிறகு அவரது நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளதே என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இதற்கு அவா்தான் பதிலளிக்க வேண்டும். நாங்கள் எப்போதும் தமிழகத்துக்கு ஆதரவாகவே உள்ளோம்‘ என்றாா்.

Advertisement

Advertisement

தற்போது உள்ள கூட்டணியின் தலைவா் பிரதமா் வேட்பாளராகக் கூறப்படும் நிலையில், உங்கள் நிலைப்பாடு என்ன எனக் கேட்டபோது, ‘தற்போது ஏதும் கூற முடியாது‘ என்றாா். திமுக, பாஜகவுடன் கள்ளக் கூட்டணி அமைத்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற்றுத் தருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நாங்கள் முழு மனதோடு கடமையைச் செய்து வருகிறோம்‘ என்றாா்.

பேட்டியின்போது, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments