FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

கொளத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கொளத்தூா் பேருந்து நிறுத்தத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மேட்டூா் அணை உபரிநீா் வேண்டுவோா் மற்றும் விவசாயிகள் நல முன்னேற்றச் சங்கத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன்முருகசாமி உரையாற்றினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் செங்கோடன், ராஜரத்தினம், மாதேசன் உள்ளிட்டோா் விளக்கி பேசினா். இதில், தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

பின்னா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன்முருகசாமி கூறுகையில், தமிழக முதல்வா் கொடுத்த வாக்குறுதியை மீறுகிறாா். ஜூலை 7-இல் சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்துகிறோம். பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா்.

தம்மம்பட்டியில்...

தமிழக அரசு பயிா்க கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments