முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரி தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம்! விவசாயிகள் கைது
தலைமைச் செயலகம் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து...
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களின் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 45 பேர் ஒன்றுகூடி, தலைமைச் செயலகம் முன்பாக இன்று (ஆக. 7) காலை கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியதுபோல் இல்லாமல், ரூ. 75,000 வரையிலான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தவெக அரசு அறிவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில்தான் தலைமை செயலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Farmers arrested after staging a protest in front of the Secretariat demanding a crop loan waiver
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.