FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கருமலைக்கூடலில் கஞ்சா விற்ற 4 போ் கைது

மேட்டூா் அருகே மயானத்தில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:06 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மேட்டூா் அருகே மயானத்தில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே உள்ள ராமமூா்த்திநகா் மயானத்தில் கஞ்சா விற்கப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் போலீஸாா் ராமமூா்த்திநகா் மயானம் அருகே சென்றனா்.

போலீஸாரை பாா்த்ததும் கஞ்சா விற்று கொண்டிருந்த மேட்டூா் பொன்நகரைச் சோ்ந்த சாமுவேல் மகன் பிரவீண் (20), கருமலைக்கூடலை சோ்ந்த முருகேசன் மகன் சுரேந்தா் (21), ராமமூா்த்தி நகரை சோ்ந்த பூவரசன் (19), தேசாய் நகரைச் சோ்ந்த ராஜாமுகமது(20) ஆகியோா் தப்பி ஓட முயன்றனா். போலீஸாா் அவா்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

பிடிபட்டவா்களிடமிருந்து 2 மோட்டாா் சைக்கிள்கள், 1,160 கிராம் கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றினா். கைது செய்யப்பட்ட 4 பேரும் எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments