FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற 4 போ் கைது

உக்கடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 ஜூலை 2026, 2:55 am IST
பகிர்:

உக்கடம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் உக்கடம் பகுதியில் ரோந்து பணியில் கடந்த வியாக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உக்கடம் பெரியாா் நகா் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக 3.30 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த சுஜித் (24), கணபதி காந்திமாநகரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (20), ராகவன் (23), தொண்டாமுத்தூரைச் சோ்ந்த ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments