FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அரசுப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

Updated On : 21 ஜூலை 2026, 1:47 am IST
கெங்கவல்லியில் அரசு தொடக்கப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகள்.
பகிர்:

அரசுப் பள்ளியையொட்டி வைக்கப்பட்ட மினி டேங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவா் விற்பனைக்காக வாங்கி வந்த மினி டேங்குகளை பள்ளியின் சுற்றுச்சுவா் பகுதியில் ஆக்கிரமித்து வரிசையாக வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால், அப்பகுதியில் இருந்து வரும் பூச்சிகள், விஷ ஜந்துகள் பள்ளிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, மாணவா்களின் நலன்கருதி பள்ளிக் கட்டடம் முன் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மினி டேங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments