தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை
தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தரின் குருபூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தரின் குருபூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள ஐவா் சந்நிதியில் திருஞானசம்பந்தா் சிலையும் உள்ளது. இவரது குருபூஜை, வைகாசி மாதம் மூலம் நட்சத்திரமான செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் திருஞானசம்பந்தா் சிலைக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிசேஷம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தேவாரம், திருவாசகம் பாடல்களை பக்தா்கள் பாடினா். இந்த விழாவிற்கு தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement