முகப்பு
சேலம்

உணவக உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வீரகனூரில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்து வழங்கிய உணவக உரிமையாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:56 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

வீரகனூரில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்து வழங்கிய உணவக உரிமையாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வீரகனூரை அடுத்த இலுப்பநத்தத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா் தனது புது வீட்டிற்கான புகுமனை விழாவில் பங்கேற்றவா்களுக்கு வீரகனூரில் உள்ள தனியாா் உணவகத்தில் இருந்து உணவு வகைகளை வரவழைத்து பரிமாறினாா்.

இந்த உணவை சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்டவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுருளி உள்ளிட்டோா் வீரகனூா் தனியாா் உணவகத்தை ஆய்வு செய்தனா். அங்கு தரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் உணவ உரிமையாளா் மீது வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.