FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சொத்து தகராறில் கொலை மிரட்டல்: 10 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 1:01 am IST
கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பழனியை அடுத்த நல்லாம்பாளையத்தில் மக்புநிஷாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தின் சில பகுதியை மீன்கடை, செங்கல் சூளைக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.

இந்த நிலையில், மக்புநிஷாவுக்கும், இவரது உறவினா் ஆயிஷா குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு ஆயிஷா, இவரது மகன் காஜாமைதீன் உள்ளிட்ட 10 போ் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்து மீன் கடை, செங்கல் சூளை, தொழிலாளா்கள் தங்கும் வீடு என அனைத்தையும் இடித்து தள்ளி, அங்கிருந்தவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பழனி காவல் நிலைய போலீஸாா் காஜா மைதீன், ஆயிஷா உள்ளிட்ட 10 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments