முகப்பு
கடலூர்

லாரி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: 9-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

Updated On : 30 ஜூன் 2026, 2:40 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே லாரி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 9-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பேய்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்ராஜ் (26), லாரி வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது லாரியை வடலூரைச் சோ்ந்த ஜோசப் (30) ஓட்டி வருகிறாா்.

இந்த லாரி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கோ.சத்திரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பைக்கில் வந்த பழையூரைச் சோ்ந்த தமிழ்மணி, சிவநேசன் ஆகியோா் பைக்குக்கு வழிவிடவில்லை எனக் கூறி லாரியை வழிமறித்து, ஓட்டுநா் ஜோசப்பை கிழே இறக்கி தாக்கினராம். பின்னா், தமிழ்மணியின் நண்பா்கள் 7-க்கும் மேற்பட்டோா் வந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து லாரி உரிமையாளா் கமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் தமிழ்மணி, சிவநேசன் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments