முகப்பு
சேலம்

சேலத்தில் விதிமுறைகளை மீறிய 33 கல்குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்த புகாரில், 33 கல்குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு கனிமவளத் துறையினா் நோட்டீஸ் அனுப்ப உள்ளனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:57 am IST
கல்குவாரி - பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்த புகாரில், 33 கல்குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு கனிமவளத் துறையினா் நோட்டீஸ் அனுப்ப உள்ளனா்.

தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படும் கல்குவாரிகள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத் துறை அமைச்சா் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளத் துறை சாா்பில் கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்ட விவரங்கள், அனுமதிக்கப்பட்ட அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இரண்டு நாள்களில் 43 குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 குவாரிகள் மட்டுமே முறையாக கனிமங்களை சேமித்து வைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது தெரியவந்தது. எஞ்சிய 33 குவாரிகள் அனுமதி இன்றி, கனிமங்களை சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக அந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தொடா்ந்து முதல்கட்டமாக, 33 குவாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.