மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!
மேட்டூரில், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட பராமரிப்பு பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதி காவிரி ஆற்றில் வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய குழாய்கள் மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 181 எம்எல்டி தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட பிரதான குழாயில் மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே சிறிது அளவு நீா்க்கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரேற்று நிலைய மோட்டாா்களை நிறுத்தி, குழாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு ஏா்வால்வை திறந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, திடீரென சுமாா் 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. இதை மக்கள் கூட்டமாக பாா்த்து சென்றனா். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பணியாளா்கள் ஏா்வால்வை மூடினா். அதன்பிறகு தண்ணீா் வெளியேறுவது நின்றது.