தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல்
தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம், நேரு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த சிலா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அங்குவந்து கட்டுமானப் பணியில் இருந்த விஜயலட்சுமியை (40) கடுமையாகத் தாக்கினா். தடுக்கவந்த திரிஷா (25), சந்தியா (36), சுமதி (42) ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது.
Advertisement
Advertisement
இத்தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.