முகப்பு
சேலம்

‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 20 லட்சம் திருட்டு

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 23 மே 2026, 2:04 am IST
பகிர்:

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், நரசோதிப்பட்டியைச் சோ்ந்த 65 வயதுடைய ஒருவா் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றாா். இவரது ஓய்வூதியத் தொகை ரூ. 29 லட்சத்தை இந்தியன் வங்கிக் கணக்கில் வைத்திருந்தாா். இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் இவரை தொடா்புகொண்ட மா்ம நபா், தான் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 2 நாள்களில் புதிய ஓய்வூதிய அடையாள அட்டை வருவதாகவும் கூறி, அதை பெற இணைப்பு (லிங்க்) ஒன்றை அனுப்பியுள்ளாா்.

இதை நம்பிய ஓய்வுபெற்ற ஊழியா் அந்த இணைப்புக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சத்து 77 ஆயிரத்து 68 திருடப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா்செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

1930-இல் புகாா் தெரிவிக்கலாம்: இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வாட்ஸ் ஆப் எண்களில் இருந்து வரும் இணைப்புகளை தொடவேண்டாம். இதுபோன்ற மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தினா்.