முகப்பு
சேலம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 17 லட்சத்தை இழந்த இளைஞா் தற்கொலை

Updated On : 30 மே 2026, 1:04 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சேலம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் அருகேயுள்ள வீராணம் சுக்கம்பட்டி தைவானூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (25). தறித்தொழில் செய்து வந்த இவா், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டாா். இதனால் ரூ. 6 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தை ரூ. 19 லட்சத்துக்கு விற்றாா். இதில் கடன் தொகையான ரூ. 6 லட்சத்தை அடைத்தாா்.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு ரூ. 11 லட்சத்தை இழந்தாா். மேலும், எஞ்சியிருந்த ரூ. 2 லட்சத்தை கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்தாா். பெற்றோா் பணம் தர மறுத்த ஆத்திரத்தில், வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த வீராணம் போலீஸாா், ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.