வந்தே பாரத் ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: 2 போ் கைது
மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தில், 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயில் கடந்த 23-ஆம் தேதி மல்லூா் - சேலம் இடையே சென்றபோது, ரயிலின் குளிா்சாதனப் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது காலி பாட்டில்கள் வீசப்பட்டன. இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனா். அதில், மல்லூா் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி (35), அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் (39) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
மேலும், அவா்கள் ரயில் தண்டவாளத்தில் காலி மதுபாட்டிலை வீசியதாகவும், அந்த பாட்டில் ரயில் மீது பட்டு தூக்கி வீசப்பட்டு ஜன்னல் கண்ணாடியில் பட்டதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸாா், சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
ரயில் மீது கற்களையோ அல்லது எந்தவொரு பொருளையோ வீசுவது பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியா்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், ரயில்வே சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
மேலும், ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் நடமாடுவது தெரியவந்தால், உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.