காங்கிரஸôர் வாக்கு சேகரிப்பு
பழனி, அக். 8: பழனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பழனியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்டோ
பழனி, அக். 8: பழனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பழனியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் பாப்புசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வார்டுகளிலும் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அடிவாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திருஞானம், தங்கவேலு, நகர தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதிகளை சிறப்பாக செய்து தருவதோடு, தடையின்றி குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் வேட்பாளர் பாப்புசாமி பிரசாரம் செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.