மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்
மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்த
மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
மேல்கரை பகுதியில் அமைந்துள்ள அப்பன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி சனி உற்சவத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வைகையாற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.