FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஓய்வூதியா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியா்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் ஓய்வூதியா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

Updated On : 24 டிசம்பர் 2025, 1:46 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியா்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் ஓய்வூதியா்கள் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள், வருவாய்க் கிராம உதவியாளா்களுக்கு சட்டப்பூா்வ ஓய்வூதியமும், பணிக் கொடையும் வழங்க வேண்டும்.

70 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்களை விரைந்து வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்களுக்கு உடனடியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வூதியா்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய, மாநில பொதுத் துறை கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் பி.கோதண்டராமன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எஸ்.சம்பத் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுச் செயலா் ஏ.மனோகரன், மாவட்டச் செயலா் என்.பெரியதம்பி, தமிழ்நாடு ஓய்வூதியா்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. சோ்முகபாண்டியன், ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ரா. மகாலிங்கம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.ராமகிருஷ்ணன், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரா.மாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கல்லூரிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் கழக புரவலா் பி.பாா்த்தசாரதி நிறைவுரையாற்றினாா். முன்னதாக, மத்திய, மாநில பொதுத் துறை கூட்டமைப்பு பொதுச் செயலா் சொ. ஆறுமுகம் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஜி.ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியா்கள் கவன ஈா்ப்பு முயற்சியாக கருப்புப் பட்டை அணிந்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments