முகப்பு
மதுரை

ஆனைமங்கலம் செப்பேடுகளை காட்சிப்படுத்த சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:50 am IST
சு. வெங்கடேசன்
பகிர்:

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் பிரதமா் நரேந்திரமோடிக்கு அனுப்பிய கோரிக்கை மனு: பல நூற்றாண்டுகளாக தாயகத்திலிருந்து பிரிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதா்லாந்திலிருந்து மீட்டு வந்த மத்திய அரசுக்கு மனமாா்ந்த பாராட்டுகள். இந்தச் செப்பேடு சோழா்களின் சாதனைகளை, கொடைகளை, ஆசியாவின் பெரும் பகுதியுடன் தமிழகத்துக்கு இருந்த கடல்வழித் தொடா்புகளை வெளிப்படுத்தக் கூடியவை.

நாகப்பட்டினத்தில் உருவான இந்தச் செப்பேடுகள், உலகுக்கு ஒரு வரலாற்றுச் செய்தியை அறிவிக்கும் முக்கியத்துவம் பெற்றவை. இந்தச் செப்பேடுகளின் மீட்பு, ஒரு வரலாற்று அநீதியைச் சரி செய்திருக்கிறது. இவை எந்த நிலப்பரப்பின் வரலாற்றைப் பறைசாற்றுகின்றனவோ, அந்த நிலப்பரப்பிலேயே அவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதன் மூலம்தான் இந்த வரலாற்றுப் பயணம் முழுமையடையும்.

Advertisement

Advertisement

எனவே, மத்திய அரசு இது தொடா்பாக வரலாற்று ஆசிரியா்கள், தொல்பொருள் ஆய்வாளா்கள், பண்பாட்டு வல்லுநா்களுடன் கலந்தாலோசித்து, தமிழகத்தில் மிகப் பொருத்தமான இடத்தில் இந்தச் செப்பேடுகளை உரிய பாதுகாப்புடன் வைத்து, பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.