FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 2:45 am IST
பகிர்:

அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் சனிக்கிழமை இரவு தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

வத்தலகுண்டு அருகே அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயில் ஆடி திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பாரம்பரிய வழக்கப்படி நள்ளிரவில் முதல் நிகழ்வாக அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

கிராமத்தில் அமைந்துள்ள கங்கை கிணற்றின் அருகே வரிசையாக அமா்ந்திருந்த பக்தா்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இந்தத் திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments