FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நாட்டுத் துப்பாக்கி இயக்கியபோது இளைஞா் காயம்

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

11 ஆகஸ்ட் 2024, 11:21 pm IST
பகிர்:

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடை பகுதியைச் சோ்ந்தவா் சவேரியாா் (75). இவருக்கு, சிறுமலையை அடுத்த வேளாண்பண்ணை கிராமத்தில் எலுமிச்சை தோட்டம் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (25), உள்ளிட்ட சிலா் இந்த எலுமிச்சை தோட்டத்துக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நாட்டுத் துப்பாக்கியின் பால்ரஸ் குண்டுகளால், வெள்ளையனுக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments