FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

காா் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

18 ஆகஸ்ட் 2024, 10:31 pm IST
விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவா் அம்ரூத்
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தெலுங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அம்ரூத் (24). இவா், தனது நண்பா்களான வெங்டேஷ், ரமேஷ் , அம்ரூத்தின் தம்பி அபி ஆகியோருடன் காரில் கோவைக்குச் சென்று விட்டு, ராமேஸ்வரம் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தாா்.

அப்போது, பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் காா் டயா் வெடித்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அம்ருத் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தாா். 3 போ் காயம் இன்றி உயிா் தப்பினாா்.

Advertisement

Advertisement

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments