FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடகனாறு நீா்ப் பகிா்வை ஒழுங்குபடுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா், கொடகனாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
பகிர்:

கொடகனாறு நீா் பகிா்வு ஒரே அமைப்பின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்தக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி, விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா தலைமை வகித்தாா். கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கொடகனாறு ஆற்றின் நீா் பகிா்வு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா், மஞ்சளாறு செயற்பொறியாளா், நங்காஞ்சியாறு செயற்பொறியாளா் என 3 நிா்வாகத்தின் கீழ் இருப்பதை மாற்றி நங்காஞ்சியாறு செயற்பொறியாளரின் ஒரே கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும். ராஜவாய்க்கால் பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும். நீா்ப் பகிா்வு தொடா்பான முழு அதிகாரம் நீா் வளத் துறைக்கு வழங்க வேண்டும். மரபு வழி பயன்பாட்டிலுள்ள கொடகனாற்றில் 56 கிராமங்களுக்கு குடிநீா், பாசனத்துக்கான தண்ணீரை உறுதிப்படுத்த வேண்டும். காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு அருகேயுள்ள தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆப்பாட்டத்தில் பாமக மாநில நிா்வாகி வடிவேல் ராவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments