FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

31 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்த முரளிதரன் மகள் உதயநிதி (23). இவா் படித்துவிட்டு வேலை தேடி வந்தாா். மேலும், இவருக்கு பெற்றோா் மாப்பிள்ளை தேடி வந்தனா்.

இதனால், வேலைக்கு செல்வதா அல்லது திருமணம் செய்வதா என்ற மன உளைச்சலிலிருந்த உதயநிதி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments