இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் மகன் அபினேஷ் (24). இவருக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அண்மையில் அபினேஷிடம் அவரது மனைவி விவாகரத்து வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த அபினேஷ் வீட்டில் உள்ள மின்விசிறியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது தந்தை மோகன் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.