FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
தற்கொலை
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பளுகல் அருகே உள்ள ராமவா்மன் சிறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (40). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது வந்தது. இதனால், இவரது மனைவி அண்மையில் தனது குழந்தைகளுடன் தாயாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால், வினோத் கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வரை இவரது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்படாததையடுத்து, அவரது தம்பி வினேஷ்குமாா் வீட்டின் பின்பக்கம் சென்று பாா்த்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, மின்விசிறியில் வினோத் தூக்கில் தொங்குவதைக் கண்டு, அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வினோத் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து, பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments