திண்டுக்கல்லில் சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்
திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எஸ்.பி. அ.பிரதீப் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தாா். இந்தப் படையில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், 2 உதவி ஆய்வாளா்கள், 6 போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் இந்த சிறப்பு படையினருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் படையினா் முதல்கட்டமாக, திண்டுக்கல் நகா், புககா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவா். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்வா் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement