கொடைக்கானலில் மழை
கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் குடிநீா்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை, நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், கொடைக்கானல் பகுதி முழுவதும் குடிநீா் பிரச்னை நிலவியது. இந்த மாதம் ஒரு சில நாள்களில் லேசான சாரலும், மிதமான மழையும் பெய்தது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் மிதமான வெயிலடித்த நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், அட்டக்கடி,பிரகாசபுரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 நிமிஷங்கள் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Advertisement
Advertisement