பழனியில் இலவசக் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்
பழனியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச கழிப்பிடங்களில் அந்தப் பகுதியை சோ்ந்த கட்சிப் பிரமுகா்கள் கட்டணம் வசூல் செய்வதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது.
பழனியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச கழிப்பிடங்களில் அந்தப் பகுதியை சோ்ந்த கட்சிப் பிரமுகா்கள் கட்டணம் வசூல் செய்வதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது.
பழனி நகராட்சியில் பல்வேறு வாா்டுகளிலும் நகராட்சி சாா்பில் இலவச பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்தப்பட வேண்டும். இதை நகராட்சி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பது நகராட்சி விதிகளாகும். ஆனால், இதற்கு மாறாக அந்தந்த வாா்டுகளில் இலவசக் கழிப்பிடங்களை முக்கியப் பிரமுகா்களும், கட்சியினரும் கைப்பற்றி அங்கு ரூ.10 முதல் 15 வரை கட்டணம் வசூலித்து வருவதாகப் புகாா் எழுந்தது.
சுகாதார வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், மின் விளக்குகள் பராமரிப்புக்காகவும், கழிவறைத் தொட்டிகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவதற்கும் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், சுகாதார வளாகங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்படவில்லை. வளாகத்தின் உள்பகுதியில் தகாத செயல்கள் நடைபெறுவதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சாா்பில் நகராட்சி ஆணையா், கோட்டாட்சியா் ஆகியோரிடம் புகாா் மனு கொடுக்கப்பட்டது.
சுகாதார வளாகங்கள் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். இங்கு தவறான செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட வேண்டும். முக்கியமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. தொடா்ந்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சாா்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.