FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியில் தவெகவினா் அன்னதானம்

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

Updated On : 29 மே 2026, 2:14 am IST
பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.
பகிர்:

பழனியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக மாவட்டச் செயலா்கள் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழனி பேருந்து நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன், பாட்டையா சேகா்பாபு உள்ளிட்டோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். பொதுமக்களுக்கு உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

தேரடி, தேவா் சிலை அருகே, பாலாஜி பவன் ரவுண்டானா அருகே என பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்விடுமுறை தினம் என்பதால் பழனிக்கு வந்திருந்த பக்தா்களும் இதில் பங்கேற்று பயனடைந்தனா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் மிதுன், மாவட்ட இணைச் செயலா் விஜய்சிவா, துணை செயலா் நாகராஜ், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments