காா் மோதியதில் பூ வியாபாரி உயிரிழப்பு
நிலக்கோட்டை அருகே காா் மோதியதில் பூ வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வத்தலகுண்டு அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் சூரிய பிரபு (30). இவா், சம்பவத்தன்று இவரது தோட்டத்தில் அரளிப் பூக்களை நிலக்கோட்டை பூச் சந்தையில் விற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வத்தலகுண்டு- நிலக்கோட்டை சாலையில் சென்றாா்.
அப்போது, மதுரையிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற காா், சூரியபிரபு சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து காரை ஓட்டிச் சென்ற மதுரையைச் சோ்ந்த கணேசனிடம் (48) விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.