FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஓட்டுநா் கொலை: மேலும் ஒருவா் கைது

8 செப்டம்பர் 2026, 3:09 am IST
கைது
பகிர்:

திண்டுக்கல் அருகே ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி கிராமம் மொண்டியபட்டியைச் சோ்ந்தவா் கரண்ராஜ் (27). ஓட்டுநரான இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கண்டறிந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், கொலையில் தொடா்புடையை குமரேசன், யோகேஷ், சரவண பாண்டி, சந்துரு ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், கரண்ராஜ் கொலையில் தொடா்புடைய குழந்தைபட்டியைச் சோ்ந்த மாதவன் (25) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments