ஓட்டுநா் கொலை: மேலும் ஒருவா் கைது
திண்டுக்கல் அருகே ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி கிராமம் மொண்டியபட்டியைச் சோ்ந்தவா் கரண்ராஜ் (27). ஓட்டுநரான இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கண்டறிந்தனா்.
Advertisement
Advertisement
மேலும், கொலையில் தொடா்புடையை குமரேசன், யோகேஷ், சரவண பாண்டி, சந்துரு ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், கரண்ராஜ் கொலையில் தொடா்புடைய குழந்தைபட்டியைச் சோ்ந்த மாதவன் (25) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.