கொலை வழக்கில் 2 பேர் கைது
மதுரையில் நிதி நிறுவன முன்னாள் ஊழியர் கொலை வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் நிதி நிறுவன முன்னாள் ஊழியர் கொலை வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த தேவ இரக்கம் மகன் ஜான். இவர் வியாழக்கிழமை மாலை செல்லூர் சாலையில் நடந்துசென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தென்னரசு, வினோத் ஆகிய இருவரைத் தேடிவந்தனர். இந்நிலையில் இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.