திருநகரில் புதிய சுகாதார வளாக கட்டட பணிகள் தொடக்கம்
திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு பின்புறம் தேசிய நகர்புற திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சம் செலவில் நவீன வசதிகளுன் கூடிய சுகாதார மையம் கட்டப்பட உள்ளது. கட்டடப்பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா
தொடக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சந்திப் நந்தூரி, மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, மாமன்ற உறுப்பினர் சந்தியாபலராமன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சர்புதீன், உதவிப்பொறியாளர் தியாகராஜன், துணை பொறியாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.