முகப்பு
மதுரை

மதுரையில் "தினமணி' சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள்

மதுரையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை தினமணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
 சிம்மக்கல்லில் உள்ள ஸ்ரீசாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.  விநாயகர் உருவங்களை விதவிதமான வண்ணத்தில் வரைந்த குழந்தைகளில் 5 பேருக்கு சிறப்புப் பரிசுகளும்,  பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகளும் வழங்கப்பட்டன.  மேலும் மூளைத் திறன் மேம்பாட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சிந்தாமணி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.