மதுரை - கோலாலம்பூருக்கு விமானம் இயக்கக் கோரிக்கை
மதுரையில் இருந்து கோலாலம்பூர், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் இயக்கக்கோரி மத்திய விமான
மதுரையில் இருந்து கோலாலம்பூர், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் இயக்கக்கோரி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மக்களவை உறுப்பினர் ஆர். கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயபிரகாசம் , சங்க கௌரவச் செயலர் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கர் ஆகியோர் புதுதில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரவுவை சந்தித்து அளித்த மனு விவரம்: மதுரை விமான நிலைய ஓடுபாதையை 7,500 அடியில் இருந்து 12,000 அடியாக நீட்டித்து, பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். மதுரையில் இருந்து கோலாலம்பூர், பாங்காக் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.