FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிரானைட் வழக்குகள் விசாரணை ஒத்தி வைப்பு

சட்ட விரோத கிரானைட் வழக்குகள் விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்து மேலூர் நீதிமன்றம் புதன்கிழமை  உத்தரவிட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சட்ட விரோத கிரானைட் வழக்குகள் விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்து மேலூர் நீதிமன்றம் புதன்கிழமை  உத்தரவிட்டது.
தனியார் இடங்களில் பதுக்கிவைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதிக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல்  செய்த 23 வழக்குகள் மற்றும் கிரானைட் முறைகேடு தொடர்பான 17 குற்ற வழக்குகளும் மேலூர் குற்றவியல்  நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இதில் கஜானியா கிரானைட் நிறுவனத்தினர் கிரானைட் கற்கள் பதுக்கி வைத்துள்ளது தொடர்பாக அரசு தரப்பில் கிராம நிர்வாக அலுவலர் அழகுபாண்டி சாட்சி அளித்தார். இதைத்தொடர்ந்து விசாரணையை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மேலூர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments