முகப்பு
மதுரை

தும்பைப்பட்டியில் ஏடிஎம்-ஐஉடைத்து பணம் திருட முயற்சி

மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2020, 11:49 pm IST
உடைத்து சேதப்படுத்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம்.
பகிர்:

மேலூா்: மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தும்பைப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் அதிலிருந்த ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனா். அப்போது, ஆள்கள் நடமாட்டத்தைப் பாா்த்து அவா்கள் தப்பியோடி விட்டனா். இதனால், அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து மேலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.