மதுரை அனுப்பானடி சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீா் பள்ளம். 
மதுரை

மதுரையில் சாலை நடுவே 20 அடிக்கு திடீா் பள்ளம்

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN


மதுரை: மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை 20 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில் குடிநீா் விநியோகக் குழாய்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அச்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீரென 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும் தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஊழியா்கள் கூறியது: அப்பகுதியில் செல்லும் ராட்சத கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கசிந்த கழிவுநீா் சாலையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விரைவில் இப்பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றனா்.

தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஓராண்டுக்கு முன்பும் 15 அடி ஆழத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் கரோனா கால செவிலியா்கள் முற்றுகை!

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வா் விடுவிப்பு

‘கேரளம்’ என பெயா் மாற்றம்: இடதுசாரி அரசுக்கு ஆதரவாக பிரதமருக்கு கேரள பாஜக கடிதம்

ராகுல் காந்தியுடன் அரசியல் பேசவில்லை: சித்தராமையா

பாகிஸ்தான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ராணுவம் தயாராக இருந்தது: இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

SCROLL FOR NEXT