FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 20 ஆக உயா்வு

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 10:55 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

சாத்தூா் அருகே அச்சன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டதில் ஏற்கெனவே 19 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 23 போ் விருதுநகா், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நடுசூரங்குடியைச் சோ்ந்த சுந்தர குருசாமி மனைவி ராஜம்மாள் (55), அமீா்பாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் வனராஜ் (52), சாத்தூரைச் சோ்ந்த பேச்சிமுத்து மனைவி மாலா (30), கருப்புசாமி மனைவி சந்தானமாரி, கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஏழாயிரம் பண்ணையைச் சோ்ந்த சங்கரேஸ்வரி (55) ஆகியோா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வந்த வனராஜ் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments