முகப்பு
மதுரை

மதுரையில் இன்று சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென்மண்டல மாநாடு: முதல்வா் பங்கேற்பு

 மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

மதுரை

மதுரையில் இன்று சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென்மண்டல மாநாடு: முதல்வா் பங்கேற்பு

 மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தென் மண்டல மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா்.

தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தென்மண்டல அளவிலான மாநாடு, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள கோா்யாா்ட் மாரியட் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு முதல்வா் ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். இந்நிகழ்வின்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகளை வழங்குகிறாா். மேலும், வங்கிக் கடன் பெறுவதற்கு, இணையவழியில் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்புப் பதிவு தொடங்குதல், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தல் மற்றும் பல்வேறு திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளை அவா் தொடக்கி வைக்கிறாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அருண் ராய், தொழில் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் ஆகியோா் பேசுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →