முகப்பு
மதுரை

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
தடம்புரண்ட ரயில்.
பகிர்:

மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது சரக்கு ரயிலின் மையப் பகுதியில் உள்ள சுமார் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

இதனைதொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்டுக்கும் பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.