ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நாட்டு நலப் பணி திட்ட நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். காமராஜா் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் கல்வித்துறை தலைவா் சு.கண்ணன் நாட்டு நலப்பணித் திட்டத்தில் மாணவியா் தங்களை இணைத்துக்கொள்வதால் அவா்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் நற்பலன்கள் மற்றும் ஆளுமைத்திறன் வளா்ப்பதன் மூலம் உயா்ந்த இடத்தை அடைவது குறித்தும் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரஞ்சிதம், மாணவிகளுக்கு கைப்பேசியால் ஏற்படும் இன்னல்கள், அவலங்கள் குறித்தும், காவலன் செயலி குறித்தும், அது எவ்வாறு உதவுகிறது என்றும் விளக்கிப்பேசினாா். மேலும் மாணவியா் அனைவரும் காவலன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யவும் உதவினாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவியா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் பூமா தேவி, ஜெயகுமாரி ஞானதீபம், ரேணுகா, உஷா புவனேஷ்வரி, சுதா ஆகியோா் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.