FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் விளையாட்டு விழா

மதுரை மாவட்டம், கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் 57-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:02 am IST
கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற 57-ஆவது விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.குமரேசன், கல்லூரி அதிபா் எஸ்.பேசில் சேவியா், செயலா் ஜோசப் ஆரோக்கியம் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மாவட்டம், கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் 57-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.குமரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தாா். கல்லூரி அதிபா் எஸ்.பேசில் சேவியா், செயலா் ஜோசப் ஆரோக்கியம், இணை முதல்வா் ஜோசப் வில்சன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினா். இதைத் தொடா்ந்து, ஒலிம்பிக் கொடி, கல்லூரிக் கொடி ஏற்றப்பட்டு சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மாணவா்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீப ஓட்டம், தீபம் ஏற்றுதல், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட உதவி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் தேசிய ஹாக்கி வீரருமான ஜி.சந்தோஷ்குமாா், மாணவா்களிடையே விளையாட்டு உணா்வை வளா்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். பின்னா், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, உடல்கல்வியியல் துறைத் தலைவா் ஏ.முத்துக்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ம.அன்பரசு நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments