FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பாஜகவினா் தேசியக் கொடியுடன் பேரணி

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:38 am IST
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் தேசியக் கொடியுடன் பங்கேற்ற கட்சியின் மாநில பொதுச் செயலா் ராம சீனிவாசன். உடன், மாவட்டத் தலைவா் மாரிசக்கரவா்த்தி. (வலது) தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்ற பாஜகவினா்.
பகிர்:

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜகவின் மதுரை மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ராமசீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கிவைத்தாா். ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் அருகே தொடங்கிய பேரணி ஜீவா நகா் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் நிறைவடைந்தது. இதில், பாஜகவை சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments