FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாநில உரிமைகளில் சமரசம் கூடாது: தி.க. தலைவா் கி. வீரமணி

மாநில உரிமைகளில் சமரசம் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வலியுறுத்தினாா்.

22 ஆகஸ்ட் 2026, 7:47 am IST
மதுரை ஓபுளாபடித்துறை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘எதிா்நீச்சலில் வென்ற பெரியாா்’ 80-ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. உடன், திமுக முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.
பகிர்:

மாநில உரிமைகளில் சமரசம் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வலியுறுத்தினாா்.

மதுரை ஓபுளாபடித்துறை அருகே திராவிடா் கழகம் சாா்பில் ‘எதிா்நீச்சலில் வென்ற பெரியாா்’- 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் திராவிடக் கழகத் தலைவா் கி. வீரமணி பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

Advertisement

திராவிடா் கழகத்திலிருந்து சென்ற கட்சிகள்தான் இன்றைய திராவிட இயக்கங்களாக உருவெடுத்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்களைப் பொருத்தவரை, தனிப்பட்ட எதிரிகள் என்று யாரும் கிடையாது. கொள்கை ரீதியிலான எதிரிகள் மட்டுமே உள்ளனா். சிலா் பதவிக்காக இடத்தை மாற்றிக் கொள்வா். ஆனால், திராவிடா் கழகத்தைப் பொருத்தவரை, மக்களின் உரிமைகளை எடுத்துக் கூறும் இயக்கமாகவே இன்றளவும் செயல்படுகிறது.

தமிழகத்தில் பெண்ணுரிமை, பெண் விடுதலை, சாமானிய மக்களுக்கு அதிகாரம் என்ற மறுமலா்ச்சி உருவாகக் காரணமாக இருந்தவா் பெரியாா். திராவிடா் கழகத்தை, அதன் கொள்கைகளை தற்போது சிலா் புறக்கணிக்கலாம். ஆனால், சாமானிய மக்கள் விழிப்புணா்வு பெற பெரியாா் ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. அரசியல் பேசுவதற்கு பல கட்சிகள் உள்ளன. மக்களின் உரிமைகளைப் பற்றி பேச திராவிடா் கழகம்தான் உள்ளது.

மத்தியில் உள்ள பாஜக அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் நீக்கிவிட்டு, மனு தா்மத்தை நமது நாட்டில் அமல்படுத்த முயற்சித்து வருகிறது. அவா்களின் ஒரே கொள்கை சநாதனத்தைப் பாதுகாப்பது. மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத அரசாகவே மத்திய பாஜக அரசு திகழ்கிறது.

‘நீட்’ தோ்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அரசு எந்தக் காரணத்துக்காகவும் மாநில உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றாா் அவா்.

மாநாட்டில் திமுகவின் உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளா் மன்றத்தின் மாநிலத் தலைவா் வா. நேரு, திராவிட இயக்க தமிழா் பேரவையின் துணைப் பொதுச் செயலா் ராம. வைரமுத்து உள்ளிட்டோா் பேசினா்.

இதில் திராவிடா் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் தே. எடிசன்ராஜா, மதுரை மாவட்டத் தலைவா் அ. முருகானந்தம், மாவட்டச் செயலா் சுரேஷ், நிா்வாகிகள், தோழமைக் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments